மருதமுனை துறைநீலாவணை எல்லை பகுதியில் தனிநபர் ஒருவரால் வளர்க்கப்படும் குதிரைகள் வீதியில் நடமாடும் காட்சிகளே இவை.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை பிரிவுக்குற்பட்ட மருதமுனை துறைநீலாவணை எல்லைப் பகுதியில் நெடுந்தீவில் வாழும் வகை குதிரைகள் அதிகளவாக வீதியில் நடமாடி திரிகின்றன.வெளிநாட்டிலிருந்து வந்துள்ள ஒருவரால் இந்தக் குதிரைகள் வளர்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.