யாழ். நகர் பகுதியில் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கோட்டை – முனீஸ்வரன் கோவிலுக்கு பின் பகுதியில் உள்ள அகழியில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் காணப்படுகிறது.
குறித்த பகுதியில் உள்ள அகழியில் சடலம் காணப்படுவதாக இன்று(22) யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.