யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி தொடக்கம் மீளவும் ஆரம்பமாகவுள்ளது.
இதற்கான அறிவிப்பினை துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து வழங்கியுள்ளார்.
சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
அத்தோடு புலம்பெயர் தமிழர்கள் தமது தாயக நிலத்துக்கு நேரடியாக, விமானமூடாக வருகை தர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.