கிளிநொச்சியில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் விசேட தொற்று நீக்கல் நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு, அறிவியல்நகர் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய பகுதிகளில் குறித்த வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த சுத்திகரிப்பு நடவடிக்கை யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்ற நிலையில், குறித்த விசேட குழுவினர் இன்று கிளிநொச்சியில் இந்நடவடிக்கையில் ஈடுபட்டது.






