காலையில் கோப்பி மற்றும் தேனீருக்குப் பதிலாக இளம் சூடான தண்ணீர் குடித்தால், உடல் எடை குறையும், கழிவுகள் வெளியேறும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சருமம் இளமையாகும், புத்துணர்வு கிடைக்கும், செரிமானம் சீராகும், மலச்சிக்கல் சரியாகும்.

காலையில் இனிப்பை சாப்பிடுவதால், உங்கள் இன்சுலின் அளவுகளை அதிகரித்து, நீரழிவு நோய்க்கு வழி வகுக்கும். தேனை காலையில் வெறும் வயிற்றில் இளம் சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால் உடலுக்கு பலம் தரும். தேனோடு எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் ரத்தம் சுத்தமாகும். ரத்த ஓட்டம் சீராகும். வயிற்று எரிச்சலை குறைக்கும். செரிமானத்திற்கு உதவும். தூக்கமின்மை போகும். உடல் எடை குறையும்.தக்காளியில் டேனிக் அமிலம் இருப்பதால், வயிற்றில் அமிலத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால், காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாஸ், தக்காளி ஜூஸ் போன்றவற்றை தவிர்க்கலாம்.

கரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றை பச்சையாகவே சாப்பிடலாம். ரத்தம் அபிவிருத்தியாக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். உடல் எடை குறையவும் உதவும். சருமத்தை பளபளப்பாக்கும்.
