சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள்ளும் கொரோனா தொற்றுடன் நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுகயீனம் காரணமாக கடந்த 2 நாட்களின் முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவ விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார்.அங்கு நாளாந்தம் சுமார் 20 வரையான நோயாளிகள் தங்கியிருந்துள்ளனர்.

