இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வடைந்துள்ளது.
ஏற்கனவே 420 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 20 பேர் அடையாளம் காணப்பட்டனர்.இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களுள் ஏழு நோயாளிகள் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.சுகாதார இயக்குநர் ஜெனரல் மேலும் கூறுகையில், 12 வயது குழந்தைக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

