கொவிட்19 வைரஸ் பரவல் காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையம் இன்றையதினம் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.


இதன்போது நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் சுகாதார வசதி மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை இடம்பெறும் முறை தொடர்பில் அமைச்சர் உட்பட குழுவினர் கண்கானித்துள்ளனர்.

சுற்றுலாப் பணிகள் மற்றும் நாட்டு மக்களும் எந்த வகையிலும் தொடர்புபடாத வகையில் செயற்பாடுகள் அமையும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.