பேலியகொடை மீன் சந்தையில் பணிபுரிந்த 523 விற்பனையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான சோதனைக்கு உட்படுத்தவுள்ளனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இதற்கமைவாக பேலியகொடை மீன் வர்த்தக சந்தையில் விற்பனை நடவடிக்கைகள், மொத்த விற்பனைக்கு மாத்திரம் வரையறுக்கப்படுவதுடன், சில்லறை விற்பனை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றன.பிலியந்தலை பகுதியில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, பேலியகொடை மீன் சந்தையை இன்று புதன்கிழமை முதல் 3 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.