கோழியாக உருவாகாமல் ஆய்வகத்திலேயெ இறைச்சியாக தயாரிக்கப்படும் செயற்கை இறைச்சி விற்பனைக்கு சிங்கப்பூர் அனுமதி அளித்துள்ளது.
உலகம் முழுவதும் இறைச்சி உணவுகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ள நிலையில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளும் அதிகமாக தேவைப்படுகின்றன. அவற்றை முட்டையிலிருந்து குஞ்சு பொறித்து தீவனம் வைத்து கறிக்கோழியாக மாற்றி விற்பதற்கு பல நாட்கள் பிடிக்கிறது.
