இத்தாலியிலுள்ள புராதான நகரமான பொம்பேயியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் பழமையான கடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கி.பி 79 இல் எரிமலை வெடித்த காரணத்தினால் இந்த நகரம் மண்ணுக்குள் புதைந்து போனது. ரோமாபுரி கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வழிப்போக்கர்களுக்காக இந்த உணவகம் இயங்கி இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூடான உணவு பொருட்களை விற்பனை செய்யும் உணவகமாக இது இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இந்த கடையை அங்குள்ள REGIO ஐந்தாம் தளத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. சுமார் 2000 ஆண்டுகள் பழமையான சுடுமண் கூஜாவில் கடையின் உரிமையாளர் உணவை வைத்துள்ளதையும் இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்ட குறித்த கடையில் முழுமையான அளவில் பானைகளும், சில உணவுப் பொருட்களின் தடயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.கடையின் முன்புறம் சேவல் மற்றும் வாத்து உருவங்கள் இடம் பெற்றுள்ளதால், இது இறைச்சிக் கடையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
உணவகத்தின் முகப்பு வண்ண நிறத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோழி மற்றும் வாத்தின் படங்களும் வரையப்பட்டுள்ளன. இங்கு கண்டெடுக்கப்பட்ட உணவுகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறைச்சியை கொண்டு உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
மேலும், முதன்முறையாக முழுமையான ஒரு உணவகத்தை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் ஆய்வு குழுவினர்.நத்தைகள், செம்மறி ஆட்டு சூப், மீன், கோழி இறைச்சி உணவுகள் இங்கு தயாரிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
Ancient leftovers from Pompeii were found this month after archaeologists excavated a thermopolium, or snack bar. A soupy concoction of snails, sheep and fish appears to have been all the rage in 79 AD. https://t.co/Ijjp6ZUbtX pic.twitter.com/1YILGFGauE
— The New York Times (@nytimes) December 26, 2020
இந்தநிலையில், இது ஒரு அசாதாரண கண்டுபிடிப்பு என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.கி.பி. 79ல் எரிமலைச் சீற்றத்தினால் அழிந்து போன பொம்பேயி நகரத்தில் தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.