யாழ் ஆரியகுளம் சந்திக்கு சற்றுத் தொலைவில் பலாலி வீதி ஆரம்பிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ஒழுங்கையில் 500 வருடங்கள் பழமையான புளியமரம் ஒன்று திடீரெனச் சரிந்து வீழ்ந்துள்ளது.
இந்தப் புளியமரம் சரிந்த பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த முதியவர் அங்கு விரைந்த யாழ் மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் வரதராஜன் உள்ளிட்ட இளைஞர்களால் பத்திரமாக மீட்கப்பட்டார்.