இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதையடுத்து தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 256 ஆக அதிகரித்துள்ளது.அதேவேளை, மேலும் ஐவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 158 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், 122 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.