கந்தசஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அசுரர்களை அழிக்க சிவனின் நெற்றி பொறியில் இருந்து பிறந்த குமரன், சுரபத்மனை எதிர்த்து வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது.

விரத நாட்களில் அதிகாலையில் துயிலெழுந்து நீராட வேண்டும். காலையும்,மாலையும் வீட்டில் விளக்கேற்றி கந்தனை மனதார வழிபட வேண்டும். விரத காலங்களில் கந்தசஷ்டி கவசம்,கந்தர் அனுபுதி,கந்த குருகவசம், சண்முக கவசம், கந்தர் கலிவெண்பா, திருப்புகழ் போன்றவற்றை பாராணயம் செய்ய வேண்டும்.விரத நாட்களில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தல் மிகவும் நன்று. இவ் விரதத்தின் போது ஆறுநாட்களும் ஒருவேளை உணவு உண்டும்,சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்ள வேண்டும்.நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம்,மாயை,கன்மம்,காமம்,பேராசை,செருக்கு,மயக்கம்,தற்பெருமை ஆகியவற்றை விடுத்து நற்குணங்களைப் பெறும் நோக்கில் கந்த சஷ்டி கடைப்பிடிக்கப்படுகிறது.