கொரோனா வைரஸ் தொற்றுவதற்கு வயது வித்தியாசம் தாக்கம் செலுத்தாதென சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பாலித கருணாபிரேம தெரிவித்துள்ளார்

நாட்பட்ட நோய் காரணமாக அதன் பாதிப்பு மேலும் அதிகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பத்தாயிரத்திற்கும் அதிக வைரஸ் வகையில் அதிக பரவல் ஆபத்தை கொண்ட வைரஸ் தற்போது இலங்கையில் பரவியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.வீட்டை விட்டு வெளியே பயணிக்கும் நபர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.மக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்களை முடிந்தளவு குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.