கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில், நாளை நடத்தப்பவுள்ள கணக்கியல் பாடத்தின்போது பரீட்சாத்திகளுக்கு உள்ளூர் பரீட்சைகள் வரலாற்றில் முதல் முறையாக நிரல்படுத்தப்படாத, கல்குலேட்டர் என்ற கணிணிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்.
கணிணிகளை பயன்படுத்த அனுமதி வழங்குவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.எனினும் கைக்கடிகாரங்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் பிற மின்னணு தொடர்பு சாதனங்களை பரீட்சை மண்டபங்களுக்கு கொண்டு செல்வது தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.