இரத்மலானையிலுள்ள ஆடை தொழிற்சாலையின் நிறைவேற்று அதிகாரியான பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.பொலிகஸ்ஓவிட்ட குடமாதுவ பிரதேசத்தை சேர்ந்த இந்த அதிகாரியின் கணவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.அவர் கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் என தெரியவந்துள்ளது. அவர் இதற்கு முன்னரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக தெரிய வருகிறது.