2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு தோற்றிய மாணவர்களில் 41,500 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
மருத்துவபீடம், பொறியியல் பீடம் உள்ளிட்ட சில துறைகளுக்கு இம்முறை அதிக மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய நடத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளின் வெட்டுப்புள்ளி ( இசெட் ஸ்கோர்) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்தப் புள்ளிகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.ஏற்கனவே வெளியிடப்பட வேண்டிய இந்த முடிவுகள் நாட்டில் கொரோனா பரவல் காரணமாகவே தாமதமாகியமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, இந்த ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் 12 முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.இந்தப் பரீட்சைக்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2648 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முடிவுகளை அறிய: www.admission.ugc.ac.lk, www.ugc.ac.lk
Call 1919 (Government Information Centre), SMS to 1919
Format: ugc Index Number -> send to 1919- Example: ugc 2223322 ->send to 1919
Call UGC –0112695301 , 0112695302 , 0112692357 , 0112675854