வவுனியா – செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் தீயில் எரிந்து ஒரு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் தவறுதலாக தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (21) அவர் உயிரிழந்துவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த விஜயா (வயது 24) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அவரது மரணம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.