மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்புடைய 100 ற்க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கொரோனா கட்டுப்பட்டு மையம் தெரிவித்துள்ளது.இன்று சனிக்கிழமை காலை மினுவாங்கொடவில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1901 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட1901 பேரில் 1041 பேர் மினுவாங்கொடவில் உள்ள பிராண்டிக்ஸ் தொழிற்சாலையின் ஊழியர்கள் என்றும் கொரோனா கட்டுப்பட்டு மையம் தெரிவித்துள்ளது.மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 39 வயதான ஒரு பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
