வவுனியா – கொறவப்பொத்தானை வீதியில் இடம்பெற்ற விபத்தினால் உயர் அழுத்த மின்சாரத்தூண் சேதமடைந்த நிலையில் குறித்த வீதியுடனான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்சாரத்தூணுடன் நேற்று பாரவூர்தி ஒன்று மோதியதில் மின்சார தூண் சேதமடைந்திருந்தது.இந்நிலையில், இது தொடர்பாக மின்சார சபைக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், அப்பகுதியில் திருத்த வேலைகள் மேற்கொள்வதற்காக வீதி முடப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டு பணிகள் இடம்பெற்று வருவதாகவும், மின்சார கம்பத்தினை மாற்றி புதிய கம்பத்தினை அமைக்கும் பணிகள் மின்சார சபை ஊழியர்களால் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

