ரஷ்யாவில் மனிதர்களுக்கு இடையே இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படுகிறது.
ஏற்கனவே ரஷ்யாவில் முதற்கட்ட பரிசோதனை மனிதர்களுக்கிடையே நடத்தப்பட்டது. இதில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து ஆர்வலர்களுக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி உண்டானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து, அந்நாட்டின் வைராலஜி தேசிய ஆராய்ச்சி மையம் இரண்டாம் கட்ட மனிதர்களுக்கிடையேயான சோதனை ஜூலை 27 ம் திகதி நடத்தப்படும் என அறிவித்தது.

