இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் உற்வசகால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இன்று காலை நேரடியாக ஆராய்ந்தார்.இராணுவத்தளபதியுடன், யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மற்றும் இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்து அறிந்து கொண்டார்.